Tuesday, December 13, 2011

அஹமதாபாத் ஒரு சிலிர்ப்பான அனுபவம் பகுதி III (Ahmadabad)


அப்பிடி என்ன பார்த்தேன்னு நீங்க கேக்குறது எனக்கு புரியுது, வேற ஒன்னும் பெருசா பாக்கல, காலைல 4 மணிக்கு பொண்ணுங்க ஒரு குருப்பா சுத்திக்கிட்டு இருகாங்க, காந்தி பிறந்த மாநிலம் சொல்லவா வேணும்னு மனசுல நினைச்சுகிட்டேன்.

சரி நம்ம இப்டியே பார்த்துகிட்டு இருந்தம்னா டங்கு வார் அந்துரும்னு சட்டு புட்டுனு கிளம்பலாம்னு, கிளம்பி ஹோட்டல் செக் அவுட் பண்ணிட்டு ஆட்டோக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன், சார் ஆட்டோ வரதுக்கு ஒரு 20 நிமிஷம் ஆகும்னு சொன்னதுனால கொஞ்சம் அப்டியே வாக் போய்டு வரலாம்னு சொல்லி கிளம்புனேன்.

கொஞ்சம் தூரம் போனவுடன் அங்க பார்த்த மக்கள் வரிசையா மாட்டுக்கு புல் கட்டு வாங்கி குடுத்துகிட்டு இருந்தாங்க, இது என்னனு விசாரிக்கலாம்னு பக்கதுல போறதுக்குள்ள ஹோட்டெல இருந்து கால், சார் சீக்கிரம் வாங்க ஆட்டோ வந்துருச்சுன்னு, சரி நெக்ஸ்ட் டைம் பாத்துக்கலாம்னு வந்துட்டேன்.
 
வந்து ஆட்டோல ஏறி ஏர்போர்ட் போங்கனு பழக்க தோசத்துல தமிழ்ல சொன்னேனேன், அவரு திரும்பி தம்பி தமிழான்னு கேட்டாரு, அப்பாடி ஒரு தமிழன குஜராத்ல பார்த்துட்டோம் டான்னு மனசுல நினைச்சுகிட்டு, அவர பத்தி கேட்டேன், அவரு இங்க வந்து 18 வருஷம் ஆயிட்டு அப்டின்னு சொன்னாரு,அவர்ட அகமதாபாத் பத்தி ஒவொன்ன கேக்க ஆரம்பிச்சேன்.

அவர் ஒவொன்ன சொல்ல சொல்ல எனக்கு ஒவ்வொன்னும் ஆச்சரியமாக இருந்தது. முதல நான் அவர்ட கேட்டது இந்த பொண்ணுக காலைல சுத்திகிட்டு இருந்தத பத்தி, அதற்கு அவர் சொன்னது இங்க பொண்ணுகளுக்கு சேப்டி கொஞ்சம் அதிகம் அதுனால அவங்க ப்ரீயா சுத்திகிட்டு இருபங்க அப்டினாறு.

அடுத்து நான் கேட்ட கேள்வி, மாடுகளுக்கு புல் குடுக்கறத பத்தி, அதுக்கு அவர் என்னா சொன்னார்ன குஜராத்திகள் கொஞ்சம் தானம் தர்மத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்னு அவரு மேல சொன்னது என்னன்னா மாடுகளுக்கு மட்டும் இல்ல புறா,நாய், ஏன் நம்ம கட்ட எறும்பு கூட விட்டு வைக்கமா காலைல வாக் போகும்போது சாப்பாடு போட்டு வருவாங்க. அதுக்காக எவளவு வேணும்னாலும் செலவு பண்ணுவானுக அப்டின்னு சொன்னாரு.

அது மட்டும் இல்லாம ஏர் போர்ட் போற வழில எறும்புக்கு அரிசி மாவு போடுறத காட்னார். நம்ம ஊர்ல அரிசி மாவு கோலத்த இப்படி மாத்தி பண்றாங்கன்னு நினச்சுகிட்டேன். சரி நல்ல விஷயம் எப்டி பன்னா என்னா ?

இதே மாதிரி நிறைய வித்தியாசமான விஷயங்கள் அகமதாபாத்ல இருக்கு, இன்னும் சொல்லனும்னா எல்லார் வீட்லயும் ஒரு கார் இருக்கு, கார் வாங்க முடியாதவங்க பைக்க ஆல்டர் பண்ணி யூஸ் பண்றாங்க. சாம்பிள் படம் போட்ருக்கேன் பார்த்து ஆல்டர் பண்ணிகொங்க.




 ஒரு வழியா ஏர் போர்ட் வந்து சேர்ந்து செக் இன் பண்ணி  போர்டிங் பாஸ் வாங்கி ப்ளைட்ல உக்காந்து ஒவ்வரு ஏர் ஹோஷ்டர்சா பாத்து முடிகதுகுள்ள உடனே ஒரு போன் வேற யாரு என்னோட பாசமிகு தந்தை என்னஆச்சு ஏர்போர்ட் வந்திடியானு கேட்டாரு, நான் எல்லாம் வந்து ப்ளைட்ல ஏறி பிளைட் கிளம்பபோது அப்டின்னு சொல்ல்றதுகுள்ள ஏர் ஹோஷ்டர் ஓடி வந்து சார் போன சுவிட்ச் ஆப் பண்ணுங்கனு தொல்லை, சரி ஒரு வழியா போன சுவிட்ச் ஆப் பண்ணி அவனுக குடுத்த பிரேக் பாஸ்ட சாப்டு முடிகரதுகுள்ள மும்பை வந்துருச்சு.


மும்பைல இறங்கி நெக்ஸ்ட் பிளைட் பிடிக்க அடிச்சி பிடிச்சி போய் செக்யூரிட்டி செக் பண்ணிட்டு இருக்கும் பொது தொடர்து போன் கால் வந்துகிட்டே இருக்கு. சரின்னு அந்த கால கட் பண்ணி விட்டுட்டு ப்ளைட்ல ஏறி மறுபடியும் போன் பண்ணி யாருன்னு கேட்டா??? நம்ம இன்டர்வியு அட்டென்ட் பண்ணிட்டு வந்ருந்த கம்பனில இருந்து HR  கால் பண்ணி நீங்க செலக்ட் ஆயிடீங்க மத்த விஷயமல மெயில் பண்றேன்னு சொன்னார்.

இப்டியான இனிமையான நினைவுகளோடு இருக்கும் பொது விமானம் பெங்களூரில் தரை இறங்கியது.....


முற்றும்

நேசமுடன்
ருத்ரா



Udanz

6 comments:

viswanathanchidambareswaran said...

எழியநடை நன்றாக உள்ளது. போகாத ஊர்களை பற்றி அறிய இதுவும் ஒரு வாய்ப்பு..

Ruthra said...

viswanathanchidambareswaran said...

எழியநடை நன்றாக உள்ளது. போகாத ஊர்களை பற்றி அறிய இதுவும் ஒரு வாய்ப்பு..

நன்றி மாப்ள
நேசமுடன்
ருத்ரா

Astrologer sathishkumar Erode said...

ம்..கலக்கலா போகுது...அங்குள்ள உணவு பழக்கம் பத்தி ஒரு பதிவு போடுங்க..அஹமதாபாத் பிரியாணியும் சிக்கனும் அப்படின்னு தலைப்புல..;-))

வெளங்காதவன்™ said...

அண்ணேன்....

நல்லா எழுரண்ணே...

:-)

Ruthra said...

நல்ல நேரம் சதீஷ்குமார் said...

ம்..கலக்கலா போகுது...அங்குள்ள உணவு பழக்கம் பத்தி ஒரு பதிவு போடுங்க..அஹமதாபாத் பிரியாணியும் சிக்கனும் அப்படின்னு தலைப்புல..;-))

தலைவா கூடிய சீக்கிரம் போடுவோம்

Ruthra said...

வெளங்காதவன் said...

அண்ணேன்....

நல்லா எழுரண்ணே...

:-)

நன்றி தலைவா

நேசமுடன்
ருத்ரா

Post a Comment